ஹைதராபாத்: இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 213 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 81, சஹா 28, பாண்டே 36 ரன்கள் எடுத்தனர். 213 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.