சென்னை: புதியதாக உருவாகயுள்ள புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். இந்த புயல் அதிராமபட்டிணம் - மணல்மேல்குடி பகுதிக்கு இடையில் கரையை கடக்கலாம் என்று வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமான அளவில் காற்று வீசக்கூடும் என்று அவர் அறிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.