புதியதாக உருவாகயுள்ள புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு: வானிலை ஆர்வலர்

சென்னை: புதியதாக உருவாகயுள்ள புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். இந்த புயல் அதிராமபட்டிணம் - மணல்மேல்குடி பகுதிக்கு இடையில் கரையை கடக்கலாம் என்று வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமான அளவில் காற்று வீசக்கூடும் என்று அவர் அறிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும் எனவும் வானிலை ஆர்வலர் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: