தாம்பரம்: தனியார் நிறுவனத்துக்கு வசதியாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் புதிதாக சிக்னல் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு புதிய சிக்னல் அமைப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் எனவும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தென்மாவட்டங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து சேருவதற்கு பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அமைத்துள்ளது. மேலும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம், ரயில் நிலையத்திற்கு என தினமும் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும்.இதனால், பெருங்களத்தூர் பகுதியை கடந்து செல்வதற்கே குறைந்தது அரைமணி நேரம் ஆகும். இந்நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய போக்குவரத்து ஆய்வாளர் ஜெயவேல் பேருந்து நிலையம் அருகில் இருந்த சிக்னலை வாகனங்கள் கடந்து செல்ல முடியாதபடி மூடினார். இதனால் பெருங்கொளத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இதற்கு 2 கி.மீ., தூரம் அலைய வேண்டியுள்ளதால், மூடப்பட்ட சிக்னலை மீண்டும் திறக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதனை தொடந்து அப்போதைய தெற்கு காவல் இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை காவல் துணை ஆணையர் கல்யாண், தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையர் பாவனீஸ்வரி, தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் அரவிந்தன், பீர்க்கன்காரனை காவல் நிலைய உதவி ஆணையர் பழனிசெல்வம் தலைமையில் பொதுமக்களிடம் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெருங்களத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு வசதியாக ஜிஎஸ்டி சாலையில் புதிதாக சிக்னல் அமைக்க எதிர்ப்பு
* ஆய்வாளர் மீது பொதுமக்கள் சரமாரி புகார்