அம்பேத்கருக்கு தீங்கு செய்கின்றனர் ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள கொள்கைகளை பலவீனப்படுத்தும் சிலர், அம்பேத்கருக்கு தீங்கு விளைவிக்கின்றனர்’ என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டிவிட்டரில் நேற்று புகழஞ்சலி செலுத்திய ராகுல், ‘அம்பேத்கர் பிறந்தநாளில் நமது அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்  என்ற நான்கு கொள்கைகளுக்கு நம்மை மீண்டும் அர்பணிப்போம். இந்நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் சிலர், நயவஞ்சமாக இந்த நான்கு கொள்கைகளை  பலவீனப்படுத்துகின்றனர். அவர்கள் அம்பேத்கருக்கு தீங்கு விளைவிக்கின்றனர்’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: