சென்னை: ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை மதுரவாயல் தொகுதி, அய்யப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.உடன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, அம்பத்தூர் பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல், மதுரவாயல் பகுதி செயலாளர் ராஜன், கணபதி, மாவட்ட பொருளாளர் கென்னடி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.பிரசாரத்தின்போது, டி.ஆர்.பாலு பேசியதாவது: இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் மாற்றியமைப்பட வேண்டியுள்ளது. ஒன்று மத்தியில் மோடியின் சர்வாதிகார ஆட்சி. மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடியின் வஞ்சக ஆட்சி. இது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். எந்த பயனும் இல்லாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாமல், இன்றைக்கு மக்கள் நிம்மதியாக வாழமுடியாமல் ஒரு மோசமான ஆட்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.