கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் டேக்வாண்டா போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முதலாவது ஆசிய-பசிபிக் டேக்வாண்டோ போட்டி (யு-18) கடந்த மாத இறுதியில் நடைப்பெற்றது. இதில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 பேர் பங்கேற்றர். இந்தியா சார்பில் பங்கேற்ற 55 பேர்களில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.