ரபேல் வழக்கில் முறைகேடு எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு கூறியதும், ஒரு வழியாக இந்த வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாகவே பலரும் நினைத்தனர். ஆனால், எதிர்பாராத திருப்பமாக மத்திய அரசுக்கு எதிராக கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ரபேல் பற்றி வாய் திறக்க வேண்டாம் என பாஜ.வுக்கு அட்வைஸ் செய்துள்ளது சிவசேனா. ‘ரபேல் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து தேவையற்ற அறிக்கை, விவாதங்களை பாஜ வெளியிட்டால், இந்த கட்சிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி என்று எதையாவது பேசி சிக்கலை ஏற்படுத்தாமல், மவுனச்சாமியாக இருப்பதுதான் சிறந்தது. கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபற்றி பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். இதுபோல், நமோ டிவி தடை பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.