இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் ராம்நகர் ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சத்யா ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:நாட்டில் நமக்கான ஆட்சி தேவை. அம்பானிக்கான ஆட்சி தேவை இல்லை. உழைக்கும் மக்களுக்கான ஆட்சி, விவசாய மக்களுக்கான ஆட்சி, தொழிலாளர்களுக்கான ஆட்சி, இளைஞர்களுக்கான ஆட்சி, மாணவர்களுக்கான ஆட்சி, பெண்களை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தேவை. அப்படிப்பட்டி நல்லாட்சி அமைய திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.