மோடி வந்தாலும் முடியல...காதோடு...

தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜகவின் கருணையுடன் அதிமுக ஆட்சியை நடத்திவருகிறது என பாமக, தேமுதிக கட்சி தலைவர்கள் கடுமையாக சாடி வந்தனர். ஆனால், இவர்கள் தற்போது அனைத்து விமர்சனங்களையும் தாண்டி கூட்டணி சேர்ந்தது அந்தந்த கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால், கூட்டத்திற்கு ஆட்களை கொண்டுவருவது குதிரை கொம்பாக உள்ளதாம். பிரதமர் மோடியே பிரச்சாரத்திற்கு வந்தாலும் கூட்டத்திற்கு ஆட்களை வரவைப்பது பெரும் தலைவலியாக இருப்பதாக முக்கிய உறுப்பினர்கள் புலம்பி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: