உயிருக்கு போராடும் தந்தை...... இக்கட்டான சூழலில் சிக்கித்தவிக்கும் பார்திவ் படேல்

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பார்திவ் படேலின் தந்தைக்கு மூளையில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 12 நாட்களாக உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இதுகுறித்து பார்திவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனது தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது தந்தைக்காக அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, நான் மைதானத்தில் விளையாடுகையில் எனது தந்தை குறித்து ஞாபகப்படுத்திக் கொள்ள மாட்டேன். எனது கவனம் முழுவதும் விளையாட்டில் தான் இருக்கும். ஆடை மாற்றும் அறைக்கு வந்தவுடன் எனது கைப்பேசியை எடுத்து பார்த்து ஏதேனும் தகவல் வந்துள்ளதா என்று சோதனை செய்வேன். மேலும், எனது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களுக்கு போன் செய்து எனது தந்தையின் நிலை குறித்து அவ்வப்போது அறிந்து கொள்கிறேன். எனது மனநிலையை குடும்பத்தினர் நன்கு அறிந்து கொண்டிருப்பதால் என்னை ஒருபோதும் சீர்குலைக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: