ட்வீட் கார்னர்... தரையில் தூங்கிய டோனி!

ஐபிஎல் டி20 தொடரில், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக நேற்று ஜெய்பூர் புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தபோது, கேப்டன் டோனியும் அவரது மனைவி சாக்‌ஷியும் தரையில் படுத்து குட்டித்தூக்கம் போட்டனர். சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட, ரசிகர்களிடம் வைரலாகப் பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: