பிரசாரத்தில் பிரேமலதா உளறல் ‘பாஜ வேட்பாளருக்கு இலையில ஓட்டு போடுங்க...’

சாயல்குடி: பிரசாரத்தின்போது தாமரை சின்னத்திற்கு பதிலாக, இரட்டை இலைக்கு பிரேமலதா வாக்கு சேகரித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று முன்தினம் சாயல்குடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், ‘‘மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இக்கூட்டணி நீடிக்கும். ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ராமேஸ்வரம் முதல் சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்படும். அதனால, பாஜ வேட்பாளருக்கு இரட்டை இலையில் ஓட்டு போடுங்க” என்றார். தொண்டர்களுக்கிடையே சலசலப்பு ஏற்படவே  சுதாரித்து கொண்ட பிரேமலதா, ‘‘நயினார் நாகேந்திரன் முன்பு அதிமுகவில் இருந்தவர். அந்த நினைவில் கூறி விட்டேன்’’ என சமாளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: