275 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 138 எம்பிக்கள் ஆதரவு வேண்டும். நேபாள கம்யூ.(யுஎம்எல்) கட்சிக்கு 77 எம்பிக்கள், நேபாள கம்யூ.(மாவோயிஸ்ட் சென்டர்)கட்சி 32, ராஷ்டிரிய சுதந்திரா கட்சி 21,ஜனதா சமாஜ்வாடி 7, சிபிஎன்-யுஎஸ் கட்சிக்கு 10 எம்பிக்களும் உள்ளனர். ஒரு கட்சி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி கொண்டால் 30 நாட்களுக்குள் பிரதமர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். அந்த வகையில் பிரதமர் பிரசந்தா இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பிரசந்தா பதவியேற்ற ஒன்றரை ஆண்டுக்குள் அவர் சந்திக்கும் 4வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.
The post 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர் appeared first on Dinakaran.