பீகார்: பீகார் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டபடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாரும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது. அதனால், தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவால் வாக்களிக்க முடியாது என்று கூறப்பட்டு வந்தது. அதனை, ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுைகயில், ‘தேர்தல் சட்ட விதிமுறை மற்றும் சிறை கைதிகளுக்கான விதிமுறைபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு, தேர்தலில் வாக்களிக்க முடியாது’ என்றனர்.