புதுக்கோட்டை: தங்கள் ஆட்சியமைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை விவசாயிகள் யாரும் கடன்களை திரும்ப செலுத்த வேண்டாம் என காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக நாடாளுமன்ற மற்றும் காலியாக உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.