விவசாயிகள் யாரும் கடன்களை திரும்ப செலுத்த வேண்டாம்: கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம்

புதுக்கோட்டை: தங்கள் ஆட்சியமைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை விவசாயிகள் யாரும் கடன்களை திரும்ப செலுத்த வேண்டாம் என காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக நாடாளுமன்ற மற்றும் காலியாக உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, 2008-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்தது. அதைபோல், மீண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் பெயரிலும், எங்கள் தலைவர் ராகுல் காந்தி பெயரிலும் சொல்கிறேன், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் அனைத்து விவசாய கடன்களையும் ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்றார். எனவே, 2 மாதங்களுக்கு யாரும் விவசாய கடன்களை கட்ட வேண்டாம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: