ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்சை வென்றது.ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸின் அனல் தெறிக்கும் பந்துவீச்சில் தடுமாற்றம் கண்டது. துவக்க வீரர் ரோகித் சர்மா (11) முகமது நபி சுழலிலும், டிகாக் (19), குருணல் பாண்டியா (6) ஆகியோர் சித்தார்த் கவுல் வேகத்திலும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 7, இஷான் கிஷன் 17 ரன்னில் வெளியேற 65 ரன்னில் 5 விக்கெட் பறிபோனது.ஹர்திக் பாண்டியாவை (14) ரஷித்கான் வெளியேற்றினார். கடைசி கட்டத்தில் போலர்ட் அதிரடியாக 26 பந்தில் 46 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கவுல் 2, புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, முகமது நபி, ரஷித்கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.