செம்பட்டி: செம்பட்டி அருகே குடும்ப தகராறில் இன்று அதிகாலை மகளை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (32). இவரது மனைவி முனீஸ்வரி (27). இவர்களது மகன் சந்தோஷ்குமார் (6), மகள் வர்ஷா ஹரிணி (4). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். தம்பதியினர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தனர். முனீஸ்வரியின் நடத்தையில் தங்கமணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மகன் சந்தோஷ்குமார் அப்பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளான்.