கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின்போது, இலங்கை தமிழர்களிடம் இருந்து ராணுவம் கையகப்படுத்திய நிலங்களில் 90 சதவீதம் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 2009ல் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கு இறுதிப் போர் நடந்தது. இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். போரின்போது, இலங்கை அரசு அலுவலகங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழர்களின் நிலப்பகுதிகளை கையகப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்தது. இதன்படி, இந்த போருக்கு பின்பு, கடந்த மார்ச் புள்ளி விவரத்தின்படி, தமிழர்கள் வசம் இருந்த 84,675 ஏக்கர் நிலங்களை இலங்கை ராணுவம் கையகப்படுத்தியது. இதில் 71,178 ஏக்கர் நிலங்கள் தமிழர்கள் வசம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.