தேசிய ஃபிஸ்ட்பால் போட்டி தமிழகம் சாம்பியன்

திருச்செங்கோடு: தேசிய அளவிலான சீனியர் ஃபிஸ்ட் பால் போட்டியின் ஆண்கள், பெண்கள் பிரிவில் தமிழக அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. தமிழ்நாடு ஃபிஸ்ட் பால் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான 2வது சீனியர் தேசிய ஃபிஸ்ட் பால் போட்டி திருச்செங்கோட்டில் நடைபெறது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 17 மாநிலங்களை சேர்ந்த அணிகள் களமிறங்கின. ஆண்கள் பிரிவு பைனலில் தமிழகம் - புதுச்சேரி அணிகள் மோதின. அதில் தமிழகம் 7-11, 11-6, 13-11 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மகளிர் பிரிவு பைனலிலும் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் மோதின. 9-11, 11-4,11-9 என்ற செட்களில் வென்ற தமிழகம் சாம்பியனானது. சுகைல் அகமது (தமிழ்நாடு) சிறந்த வீரராகவும், ஈஷா (தெலுங்கானா) சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு பெற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: