ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி பாஜ கட்டுப்பாட்டில் இருப்பதை, பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரங்களில் தெளிவாக உணர முடிகிறது. ஒரே மோடி புராண பேச்சுகளால் அதிமுக தொண்டர்கள் விரக்தி அடைகின்றனர். அதிமுக பிரசார களமே மோடி புகழ் பாடுவதாகத்தான் இருக்கிறது.‘மோடி எங்கள் டாடி’, ‘இந்தியாவின் பாதுகாவலன்’, ‘நாட்டை காக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்’ என அமைச்சர்கள் முதல் அதிமுக விஐபிகள் வரை தங்களது பேச்சில் மோடி புராணம் பாடத்தொடங்கி விடுகின்றனர். 2014ல் நடந்த தேர்தலில் பிரதமர் தேர்வாக கருதப்பட்டவர் ஜெயலலிதா. மோடியா, லேடியா என்றெல்லாம் பிரசாரம் ஓடியது. தற்போது தங்களது பிரசாரத்தில் மோடி அரசின் சாதனைகள் என்று ஒரு பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிமுக அரசின் சாதனைகள் என்று ஒன்றை கூட சொல்லவில்லை என தொண்டர்கள் தரப்பு புலம்புகிறது.