புதுடெல்லி: கர்தார்பூர் வழித்தட குழுவிற்காக அமைக்கப்பட்ட பாகிஸ்தானின் குழுவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடம் பெற்றதற்கு, அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்பில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குருநானக் ஜெயந்தியன்று பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் எல்லை தாண்டி குருநானக் நினைவிடத்துக்கு சென்று வாழிபாடு நடத்துவார்கள். இந்நிலையில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தேரா கோயிலில் இருந்து குருத்வாரா தர்பார் சாகிப்பை இணைக்கும் வகையில் கர்தார்பூர் சிறப்பு வழித்தடத்தை அமைக்க இந்தியாபாகிஸ்தான் அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக சமீபத்தில் அட்டாரியில் இந்தியாபாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற உள்ளது. 2வது கட்ட பேச்சுவார்த்தை வரும் 2ம் தேதி வாகா எல்லையில் நடைபெறுவதாக இருந்தது.