ஈபோ: மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியாவும், தென் ெகாரியாவும் மோதுவது உறுதியாகி உள்ளது. மலேசியாவின் ஈபோ நகரில் 28வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, மலேசியா,ெதன் கொரியா, ஜப்பான், கனடா, போலாந்து ஆகிய நாடுகள் விளையாடுகின்றன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள இந்தியா 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் 2வது இடத்தை பிடித்துள்ள கொரியாவும் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. மலேசியா , கனடா தலா 6 புள்ளிகளுடனும், ஜப்பான் 3 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் போலாந்து புள்ளிகள் ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இன்று கடைசி சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இந்தியா- போலாந்து , கொரியா - ஜப்பான், மலேசியா - கனடா அணிகள் மோத உள்ளன.இந்தப் போட்டிகளின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்தியா, கொரியாவின் இறுதிப் ேபாட்டி வாய்ப்பு பாதிக்கப்படாது.