வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டபேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் போட்டியிடுகிறார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 24ம் தேதி பேரணாம்பட்டு டவுன் 18வது வார்டு காரைகாடு பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது ரபீக் மனைவி ஜம்துனா(40) என்பவர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தார். இதையறிந்த அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தியின் ஆதரவாளர்கள் 4 பேர் மறுநாள் காலை ரபீக் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த ஜம்துனா மற்றும் அவரது மகன் சாஜ்உதின் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.