தானே: மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களுக்கு வினாத்தாள் மொபைலில் வெளியானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் கால்ஹர் தேர்வு மையம் அருகே மாணவர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் தேர்வுக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது சில மாணவிகள் ஆட்டோவில் இருந்தபடி செல்போனில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கல்வி வாரிய அதிகாரி மாணவிகளின் இந்த செயலால் சந்தேகமடைந்தார்.