புதுடெல்லி: நடப்பு கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் இணைத்து ஒற்றை ஆவணம் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண், சான்றிதழ் உள்ளடக்கிய ஒற்றை ஆவணம் அளிக்கப்பட உள்ளது. இதனையே சான்றிதழாகவும் பயன்படுத்தலாம். நகல் தேவைப்பட்டால் சிபிஎஸ்இ அறிவுறுத்திய சான்று சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். பிளஸ்2 மாணவர்களுக்கு வழக்கம்போல், மதிப்பெண்கள் பட்டியல், சான்றிதழ் தனித்தனியே வழங்கப்படுவது தொடரும்.