ஆந்திர அரசியலில் புதிய திருப்பமாக, சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். மாயாவதியும் பவன் கல்யாணும் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மாயாவதி கூறியதாவது: ஆந்திர சட்டப்பேரவை மக்களவை தேர்தலில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். புதியவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆந்திரா, தெலங்கானாவில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.