கும்பாபிஷேக விழா

சென்னை: பொன்னேரி மெதூர் - இலுப்பாக்கம் வழித்தடத்தில் குமரஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள  பொன்னியம்மன்  குமாரசுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கணபதி ஹோமம், விேஷச பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை, உற்சவர் திருவீதியுலா நடைபெறுகிறது. 24ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்தலத்தில் 7.9 அடி உயரமுள்ள  குமாரசுவாமி, பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து 6 வாரம் நெய்விளக்கேற்றி, அபிஷேகம் செய்து, அதை சாப்பிட்டு வந்தால் வேண்டுதல் நிறைவேறும். கும்பாபிஷேக விழாவில், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி அருள்பெறுமாறு ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: