சென்னை: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீசை உடனே அரசு திரும்பப் பெற வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். கல்லூரிக்கு ராகுல் காந்தியை அழைப்பது என்பது முன்பே எடுத்த முடிவு என அவர் கூறியுள்ளார். அவரை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைக்காமல் எம்.பி என்ற முறையில் ராகுலுக்கு அழைப்பு விடுத்தனர் என அவர் விளக்கமளித்துள்ளார்.