பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் விவகாரத்தில், பைனான்ஸ் அதிபர் மகன் திருநாவுக்கரசு (27), சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகிய 4 பேர், போலீஸ் பிடியில் சிக்கும் முன்பு பொள்ளாச்சி புறநகர் பகுதியில் சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தனர். இந்த தகவல் அறிந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் சுமார் பத்து பேர் அங்கு சென்றனர். திருநாவுக்கரசு கும்பலை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘‘வீடியோ எடுப்பியாடா... எதுக்குடா வீடியோ எடுத்தாய்... இப்படி எத்தனை பிள்ைளங்க வாழ்க்கையடா சீரழிப்பீங்க... போடு... போடு... அடி... விடாதே... நொறுக்கு... மச்சான்.. காலில் போடு மச்சான்... காலை உடை... இவன் வாழ்க்கையில் எழுந்து நடக்கவே கூடாது... காலில் போடு மச்சான்...’’ எனக்கூறி ஆக்ரோஷமாக தாக்குகின்றனர். அடி வாங்கியவர்களில் ஒருவர், ‘‘எங்களுக்கு எதுவும் தெரியாது...’’ என கெஞ்சுகிறார். எப்படிடா தெரியாமல் இருக்கும்.... எனக்கூறி செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கும் இந்த வீடியோ பரபரப்பை உருவாக்கியுள்ளது.