சென்னை: தமிழக சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக விஜயகுமார் உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த விஜயகுமார் அதே பணியிடத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாகவும், ரயில்வே கூடுதல் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு அதே இடத்தில் டிஜிபியாகவும், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கூடுதல் டிஜிபியாக இருந்த கரன்சின்கா அதே பணியிடத்தில் டிஜிபியாகவும், சிவில் சப்ளை சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த பிரதீப்.வி.பிலீப் அதே பணியிடத்தில் டிஜிபியாகவும், காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் டிஜிபியாக இருந்த குடவாலா அதே பணியிடத்தில் டிஜிபியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.