டிடிவி.தினகரன் முன்னிலையில் பாடகர் மனோ அமமுகவில் இணைந்தார்

சென்னை: திரைப்பட பின்னணி பாடகர் மனோ டிடிவி.தினகரன் முன்னிலையில் நேற்று அமமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணி ஆகியவற்றில் அமமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டியிட தயாராக உள்ளது. இதைதொடர்ந்து அதிமுக, பாஜவுடன் பாமக கூட்டணி வைத்ததால் அதை விரும்பாத நடிகர் ரஞ்சித் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ டிடிவி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நேற்று இணைந்தார். இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழில் பிரபல திரைப்பட பாடகராக வலம் வருகிறார். நேற்று மாலை டிடிவி.தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனோ தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: