அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு டிடிவி.தினகரன் காணாம போவார்

மதுரை: மதுரை பனகல் ரோட்டிலுள்ள மாநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நீர்மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணிக்குத்தான் தேமுதிக வரும். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி பேசியுள்ளார். அதிமுகவுக்கு தோல்வி பயம் இல்லை. எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடிதான் இருப்பார். நாட்டின் சிறந்த தலைவர் அவர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து பிரதமர்தான் முடிவு செய்வார். தேர்தல் சூறாவளியில் டி.டி.வி.தினகரன் காணாமல் போய்விடுவார். எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

‘ரயில்வே துறையை கண்காணிக்கும் ேமாடிக்கு நன்றி’

மதுரை ரயில் நிலையத்தில் 10 கோடி செலவில் நவீன தங்கும் விடுதி, நடைமேடைகள் கட்டப்பட்டன. இவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்பி கோபாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ‘‘ மதுரையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் சுமார் 58 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறை மோடி தலைமையில் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே மோடிக்கு நன்றி’’ என்றார். எல்லா அமைச்சர்களும் மோடி புகழ் பாடுவதால்,  செல்லூர் ராஜூவும் இப்படிச்சொன்னது சிரிப்புமூட்டியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: