தேர்தல் நடந்த 380 தொகுதிகளில் இப்பவே 270 தொகுதியை பா.ஜ தாண்டிவிட்டது: அமித் ஷா சொல்கிறார்

கொல்கத்தா: தேர்தல் நடந்த 380 தொகுதிகளில் பா.ஜ இப்போதே 270 தொகுதியை தாண்டி விட்டது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மக்களவைக்கு இதுவரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. மொத்தம் 380 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இதுபற்றி மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘4 கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 380 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மட்டும் 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 380 இடங்களில் இதுவரை நடந்த தேர்தலில் பிரதமர் மோடி ஏற்கனவே 270 இடங்களுடன் முழுப் பெரும்பான்மை பெற்றுள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றார்.

The post தேர்தல் நடந்த 380 தொகுதிகளில் இப்பவே 270 தொகுதியை பா.ஜ தாண்டிவிட்டது: அமித் ஷா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: