அவர் தனது டிவிட்டர் பதிவில்,” ரூ.20ஆயிரம்கோடி செலவழித்த பின்னரும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்?, வாரணாசியில் தத்தெடுத்த கிராமங்களை பிரதமர் கைவிட்டது ஏன்? மகாத்மாவின் மரபை அழிப்பதில் பிரதமர் உறுதியாக இருப்பது ஏன்? 2014ம் ஆண்டு வாரணாசி வந்தபோது பிரதமர் புனித கங்கை நீரை சுத்திகரிப்பதாக உறுதியளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஆபரேஷன் கங்காவை நமாமி கங்கா என்று மாற்றிவிட்டார். வரி செலுத்துபவர்களின் ரூ.20ஆயிரம் கோடி பணம் எங்கே சென்றது? வாரணாசியில் தனது தோல்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ரூ.20ஆயிரம் கோடி செலவழித்தும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு காங். கேள்வி appeared first on Dinakaran.