வத்திராயிருப்பு: வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு பாடுபடும் மோடிதான் எங்கள் டாடி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஜூரத்தில்தான் பிரதமர் மோடி மீது, ராகுல்காந்தி ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். தேர்தல் பயத்தில் மோடி மீது பல தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தேமுதிக கூட்டணி சுமுகமாக முடியும். எம்ஜிஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்ததன்பேரில்தான் எம்ஜிஆர் பெயரை மோடி சூட்டினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் வலிமையை காக்க ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக அல்ல.