கோபி: ரூ.25 ஆயிரம் மானியம் வழங்குவதற்கு முன்பாகவே, ரூ.10 ஆயிரம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்கின்றனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டிரில்லர் உள்ளிட்ட 212 இயந்திரங்களை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற இயந்திரங்களை வழங்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், விவசாயத்தை ஊக்குவிக்க அரசு சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மானியம் வழங்கி வருகிறது. அந்த மானியங்களை வழங்கும்போது தரமான நிறுவனங்களில் இருந்து பொருட்களை விவசாயிகள் பெற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.