நாட்டுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள், தலைமை ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அது மக்கள் நலனுக்காகத்தான் என்று நம்பிக்கை வைத்துள்ளவர்கள். ஜெயலலிதா மறைந்தபோது, பிரதமர் மோடி நமக்கு ஆதரவாக இருந்தார். மத்திய அரசும் நம்முடைய துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டது, நமக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் நாங்கள்.

தவறு செய்ய மாட்டோம், தவறு செய்பவர்களோடு சேர மாட்டோம். தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்றால், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். ஜெயலலிதா இன்று இருந்திருந்தால், என்ன முடிவெடுத்திருப்பாரோ அதே முடிவைத்தான், அவரின் விசுவாச தொண்டர்களான நாங்கள் எடுத்துள்ளோம். ஜெயலலிதா -மோடி இடையேயான நட்பின் அடிப்படையிலேயே கூட்டணி வைத்துள்ளோம். இந்திய மண்ணின் இறையாண்மையை காக்க மோடியை வலிமை மிக்க பிரதமர் ஆக்குவோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: