அலபாமா: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு அலபாமாவின் லீ பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ என்ற சுழிக்காறு மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் கோர தாண்டவமாடியது. இதன் காரணமாக பலர் உயிரிழந்தனர். பலியானவர்களில் சிறுவர்களும் அடங்குவர். அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணத்தின் சில பகுதிகளில் அடுத்தடுத்து பலத்த வேகத்துடன் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்கள் காற்றில் பறந்தன. அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணம் அருகில் சில பகுதிகளில் அடுத்தடுத்து பலத்த வேகத்துடன் சூறாவளி சுழன்றடித்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்கள் காற்றில் பறந்தன. ஒபேலிக்கா என்ற இடத்தை மையம் கொண்ட சூறாவளியில் அங்கு மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்தனர்.