பெல் அல்சோர்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி பகுதியை மீட்பதற்கான சண்டை தீவிரமடைந்து வருகிறது. பெல் அல்சோர் மாகாணத்தில் இருக்கும் பகோஸ் கிராமம் தான் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருக்கும் கடைசி பகுதியாகும். இங்கிருந்தும் அவர்களை விரட்டியடிக்க அமெரிக்க தலைமையிலான சிரிய அரசு படைகள் அங்கு தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுகிழமை முதல் தொடர்ந்து 18 மணிநேரம் நீடித்த சண்டையில் அரசு படைகள் பகோஸில் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.