பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானங்களுக்கு தடை

டெல்லி  : பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றம் நீட்டிப்பதால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானங்கள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அமிர்தசரஸ், சண்டிகர், சிம்லா, தர்மசாலா, குலு விமான நிலையங்களும், லூதினா, ஆதம்பூர், பதான்கோட், டேராடூன், பான்ட்நகர் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உத்தரகாண்டின் டேராடூர் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் 3 மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: