துபாயில் நடைபெற்ற தனிதிறன் போட்டிகளில் தமிழக குழந்தைகளுக்கு பரிசு

துபாய்: துபாயில் நடைபெற்ற தனிதிறன் போட்டிகளில் தமிழக குழந்தைகள் பரிசு பெற்றுள்ளனர். துபாயில் டேலன்ட் சோன் பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ,மாணவியருக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் அமீரகத்திலுள்ள பல்வேறு பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவ,மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பரிசுகளை வென்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீது யாசின், ரமேஷ், எஸ் ஈவெண்ட் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டேலன் சோன் நிறுவனர் சேனியோ மற்றும் கவுசர் ,வரதராஜன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: