துபாய்: துபாயில் நடைபெற்ற தனிதிறன் போட்டிகளில் தமிழக குழந்தைகள் பரிசு பெற்றுள்ளனர். துபாயில் டேலன்ட் சோன் பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ,மாணவியருக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் அமீரகத்திலுள்ள பல்வேறு பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவ,மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பரிசுகளை வென்றுள்ளனர்.