சென்னை : சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்றுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தியை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.