டெல்லி: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. பொன்மணிக்கவேலுக்கு எதிராக 60 புகார்களை சக போலீஸ் அதிகாரிகள் அளித்துள்ளனர். சரியான ஆய்வு செய்யாமல் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. சிலைகடத்தல் தொடர்பாக எஃப்.ஐ.ஆரை தவிர வேறு எந்த விவரமும் அரசுக்கு தெரியாது என உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தமிழக அரசு தரப்பு வாதம் செய்து வருகிறது.