மங்களூரு: கர்நாடகாவின் சிரசி காவல்நிலையத்தில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவின் உதவியாளர் புகார் அளித்துள்ளார். அதில், ‘‘அமைச்சரிடம் இந்தியில் பேசிய நபர்கள், வரம்புக்கு மீறி பேசி வருவதாகவும், அதை நிறுத்தி கொள்ளாவிட்டால் வெடிகுண்டு வைத்து பீஸ், பீஸ்ஸாக்கி கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.