பாத்ரக்: ‘‘விரக்தி அடைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததன் வெளிப்பாடே புல்வாமா தாக்குதல்’’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று ஒடிசா சென்றார். ஆங்கிலேயர் ஆட்சியில், பஞ்சாப்பின் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை போல, ஒடிசாவின் இரம் பகுதியில் 1942ம் ஆண்டு படுகொலை சம்பவம் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கான நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.