திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் தரிசனத்துக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பக்தர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. இளம்பெண்கள் மீண்டும் தரிசனம் செய்ய வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. .இந்நிலையில், நேற்று முன்தினம் தெலங்கானாவை சேர்ந்த 4 பெண்கள் தரிசனத்துக்காக வந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால், அவர்கள் திரும்பி சென்றனர். இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் நேற்று தரிசனத்துக்காக வந்தார். நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பஸ்சில் இருவரும் சென்றனர்.