லக்னோ : புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஐஏஎஸ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த தொகையானது டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.