புதுடெல்லி: ஜி.எஸ்.டி வரியால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான வாதத்தில் பேசிய அவர், தேர்தலுக்காகவே மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் வேலைவாய்ப்பு பெருகவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.யால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.