வானூர்: ஆரோவில்லில் இன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் உதயமான பிப்ரவரி மாதத்தில் ஆண்டு தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், உலக அமைதி வேண்டியும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 12வது ஆண்டு மாரத்தான் ஓட்டம் 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், சிறுவர்களுக்கான 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளின் கீழ் நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.