புதுடெல்லி: நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்து வருவதால், அதை உடனடியாக கண்டறிவதற்காக ேமலும் 300 கருவிகளையும், நிலையங்களையும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் வேகமாக பாதிக்கப்பட்டு, மாசு அதிகரித்து வருகிறது.எனவே, காற்றின் தரத்தை உடனுக்குடன் கண்டுபிடித்து தெரிவிக்கும் 150 நவீன கருவிகளை நாட்டின் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும், 731 மாசு கண்டறியும் மையங்களும் 70 நகரங்களில் நிறுவப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் மட்டும் 48 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.